ரூ.5 லஞ்சம் வாங்கிய கம்பியூட்டர் ஆபரேட்டர்.! கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை.!

Published by
பால முருகன்

சென்னை : குஜராத்தில் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி  ஆபரேட்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.

குஜராத் அகமதாபாத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம அலுவலகத்தில்  விவசாயிகளுக்கு அரசு நில ஆவணங்களை வழங்க ரூ.5 வாங்கிய மோர்கண்டா கிராமத்தைச் சேர்ந்த கணினி ஆபரேட்டர் நவீன்சந்திர நகும் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்துள்ளனர்.

நில ஆவணங்களை வழங்க ரூ.5 வாங்கும் தகவலை காவல்துறையினருக்கு சிலர்  தெரிவித்த நிலையில், மோர்கண்டா இன்ஸ்பெக்டர் எம்.டி.படேல் குழு ஒன்றை அமைத்து கொண்டு நவீன்சந்திர நகும் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைது செய்தனர். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நவீன்சந்திர நகுமிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் குறித்து பேசிய இன்ஸ்பெக்டர் எம்.டி.படேல் “கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து நவீன்சந்திர நகும் இங்கு பணியாற்றி வருகிறார். விவசாயிகளுக்கு நில வருவாய் ஆவணங்கள் மற்றும் உரிமைக் கடிதங்களை வழங்குவது தான் அவருடைய வேலை. அப்போது , விவசாயிகளுக்கு அரசு நில ஆவணங்களை வழங்க ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.5 வாங்கி கொண்டு இருந்ததுள்ளார். அதில்  2 ரூபாய் அரசாங்கத்திற்குச் செலுத்தியுள்ளார்.

ஆனால், நாங்கள் சென்றபோது ஒரு விண்ணப்பத்திற்கு 10 ரூபாய் வாங்கி கொண்டு அதில் 5 ரூபாயை வாங்கி பைக்குள் வைத்து கொண்டதாக எங்களுக்கு புகார் வந்தது. இதன் அடிப்படியில் அவருக்கு பொறி வைத்து பிடித்தோம்” என்றும் இன்ஸ்பெக்டர் எம்.டி.படேல் தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

9 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

10 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

10 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

11 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

11 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

12 hours ago