கேரளாவில் கடந்த சில நாள்களாக தென் மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் கடந்த 8 தேதி முதல் வெள்ளத்தில் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 88 அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இறந்த இரு சகோதரிகளின் உடல்கள் கட்டி அணைந்த நிலையில் மீட்கப்பட்டன. கேரளாவில் காவலப்பராவில் உள்ள முத்தப்பங்குன்னு மலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
அங்கு 2 மாத குழந்தை உட்பட 5 குழந்தைகளுடன் வசித்து வந்த விக்டர் மற்றும் தோமாவின் வீடு மிகவும் சேதமடைந்தது.இதில் அனகா (8) மற்றும் அலீனா(4) என்ற சகோதரிகள் சிக்கி கொண்டனர்.இவர்களின் தந்தை விக்டர் குழந்தைகளின் அழு குரல் கேட்டு மீட்க கடுமையாக போராடினார்.
ஆனால் அவரின் முயற்சி தோல்வியில் முடிந்தது.இடிபாடுகளில் சிக்கிய இரு சகோதரிகளின் உயிர் ஒன்றாக பிரிந்தது. எப்போதும் ஒன்றாக கட்டிப்பிடித்து உறங்கும் இந்த சகோதரிகளின் உயிர் இருவரும்ஒன்றாக பிரிந்தது .
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…