கனடாவில் கொல்லப்பட்ட மாணவனின் உடல் நாளை இந்தியா வருகை!

Published by
பாலா கலியமூர்த்தி

கனடாவில் கொல்லப்பட்ட இந்திய மாணவன் கார்த்திக் வாசுதேவின் உடல் நாளை டெல்லிக்கு கொண்டு வரப்படும் என தகவல்.

கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட 21 வயதான இந்திய மாணவன் கார்த்திக் வாசுதேவின் உடல் நாளை டெல்லிக்கு கொண்டு வரப்படும் என்று அவரது தந்தை ஹிதேஷ் வாசுதேவ் தெரிவித்ததாக தகவல் கூறப்படுகிறது. இந்த கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும், வழக்கறிஞரை பணியமர்த்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் டொராண்டோ காவல்துறை கூறியுள்ளது என்றும்  இதன் காரணமாக அடுத்த விசாரணை ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறும் எனவும் மாணவனின் தந்தை கூறினார்.

கடந்த 7-ஆம் தேதி வியாழக்கிழமை மாணவன் கார்த்திக் வாசுதேவ், மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து இறங்கி பேருந்தைப் பிடித்து பகுதிநேர பணிக்காக டோரண்டோ சென்று கொண்டிருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால், இந்த கொலைக்கான காரணம்ப ற்றி தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இறந்த மாணவனின் உடல் உடலை தாய்நாட்டுக்கு அனுப்புவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்று டொராண்டோ காவல்துறை தெரிவித்த நிலையில், உடல் நாளை தாயகம் கொண்டுவரப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஏர் இந்தியா நிறுவனத்தில் 51 பாதுகாப்பு குறைபாடுகள் – DGCA தணிக்கையில் அம்பலம்.!

ஏர் இந்தியா நிறுவனத்தில் 51 பாதுகாப்பு குறைபாடுகள் – DGCA தணிக்கையில் அம்பலம்.!

டெல்லி : இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் குறித்து சமீபத்திய DGCA தணிக்கைகள் பல முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளன.…

2 hours ago

மோடி எங்கே? அமித்ஷா பதிலுரை.., எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…

3 hours ago

கே.டி.ராகவனுக்கு மீண்டும் பொறுப்பு – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர்…

4 hours ago

பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!

சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…

4 hours ago

ஆக.1ம் தேதி முதல் இந்தியாவுக்கு 25% வரி – அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) முதல்…

5 hours ago

நாசா – இஸ்ரோ கூட்டு முயற்சி.., விண்ணில் சீறி பாய்ந்தது ‘நிசார்’ செயற்கைக்கோள்.!

ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…

5 hours ago