உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி பகுதியைச் சேர்ந்த 14 வயது ஃபர்மான் என்ற சிறுவன் ரீல்ஸ் மோகத்தில் ரயில் தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது அவர் தண்டவாளத்தை நெருங்கியபோது, வேகமாக வந்த ரயில் அவர் மீது மோதியது. இந்த மோதலில் அங்கிருந்து தூக்கி வீசப்பட்ட ஃபர்மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பிறகு இறந்த சிறுவன் உத்தரபிரதேச மாநிலம் ஜஹாங்கிராபாத்தில் உள்ள தேரா தௌலத்பூரில் வசிக்கும் முன்னா என்பவரின் மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிறுவனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதன்பிறகு ஃபர்மானின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்களும் வந்தனர். ஃபர்மான் தனது நண்பர்கள் ஷுஐப், நாதிர் மற்றும் சமீர் ஆகியோருடன் அருகில் ஒரு ஊர்வலத்தைக் காணச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது தாமேதர்பூர் கிராமத்தை ஒட்டியுள்ள ரயில் தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் எடுக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. தற்போது, இந்த சம்பத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
unknown node