கொரோனா சமூக பரவலாகியுள்ளதை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும் – மாநிலங்களவை எம்பி.!

Published by
Rebekal

கொரோனா வைரஸ் இந்தியாவில் சமூக பரவலாக உள்ளது என்பதை மத்திய அரசு ஒப்புக் கொள்ள வேண்டும் என சஞ்சய் சிங்க் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தாக்கம் அதிகளவில் பரவிக் கொண்டே செல்வதால் அனைத்து நாடுகளிலும் இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருந்தாலும் இன்னும் சமூக பரவலாக மாறி உள்ளது என்பதை  மத்திய அரசு ஒத்துக் கொள்ளவில்லை என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங் அவர்கள் அண்மையில் அளித்த பேட்டியில் கூறினார். இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறி உள்ளது என்பதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

வைரசை கட்டுப்படுத்துவதில் டெல்லி தான் முன்னணியில் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ள அவர், நோய்த்தொற்று எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை எனவே தான் இந்த தொற்று சமூக பரவலாக மாறியுள்ளது. இதற்கு பெரிய அளவில் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் அதிக சோதனைக் கருவிகளை கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்காவில் ஒரு பில்லியனுக்கு 1,47,000 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன நிலையில், ரஷ்யாவில் ஒரு மில்லியனுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் ஒரு மில்லியனுக்கு 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் சோதனைகள் மட்டுமே நடத்தப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் போதுமான அளவு சோதனை கருவிகள் இல்லை மற்றும் சோதனைகள் முறையாக நடத்தப்படவில்லை என்பது தெரிய வருகிறது. எனவே இந்த சமூக பரவலை கட்டுப்படுத்த விரைவில் அதிகப்படியான சோதனைகளை மேற்கொள்ள வேண்டுமென ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்! 

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

30 minutes ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

9 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

9 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

11 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

12 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

12 hours ago