தலைநகரில் கொரோனவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,300 ஆக உயர்வு

டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தோற்றால் 42 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,300 ஆக உயர்வு.
டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் ஒரே நாளில் 2,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,09,140 ஆக உயர்ந்துள்ளது.
அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 2,468 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 84,694 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, ஒரே நாளில் 42 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,300 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 21,146 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.