கொரோனாவிற்கு பயந்து ஒன்றரை வருடமாக வீட்டை விட்டு வெளியே வராத குடும்பம்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ், கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு, பலர் மீண்டு வந்திருந்தாலும், பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த வைரஸானது, மக்கள் மத்தியில் உயிர் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், சீனிவாசலு என்ற விவசாயி, தனது மனைவி, ஒரு மகன் மற்றும் 2 மகள்களுடன் கூடாரம் அமைத்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், இவர்கள் கொரோனாவிற்கு பயந்து ஒன்றரை வருடமாக வெளியே வராமல் இருந்துள்ளனர். வீட்டிற்கு தேவையானவற்றை அவரது மகன் மட்டும் வாரத்திற்கு ஒருமுறை வெளியே சென்று வாங்கி வந்துள்ளார்.
இந்நிலையில், அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட வீட்டுமனை பட்டா அளிப்பதற்காக, வட்டாட்சிய அலுவலக ஊழியர்கள் அங்கு சென்றனர். ஆனால், அதனை பெற்றுக் கொள்ள அவர்கள் கூடாரத்தை விட்டு வெளியே வரவில்லை. இதனையடுத்து, அவர்களை போலீசார் உதவியுடன் வெளியே அழைத்த வந்துள்ளனர். குடும்பத்தார் அனைவரும், மெலிந்த நிலையில், உடல்குன்றிய நிலையில் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, போலீசார் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…