உணவு உட்கொள்ளவில்லை என 8 வயது சிறுவனை குச்சியால் தாக்கிய தந்தை…! பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்…!

Published by
லீனா

குஜராத்தில் 8 வயது சிறுவன் உணவு உட்கொள்ளவில்லை என தந்தை அடித்ததில் பரிதாபமாக உயிரிழப்பு. 

நேபாளத்தைச் சேர்ந்த குடும்பம், குஜராத்தின் கலாவாட் சாலையில் உள்ள ராணி கோபுரத்திற்கு அருகிலுள்ள நந்தன்வன் சொசைட்டியில் வசித்து வருகிறது. இந்நிலையில் சித்தராஜ் என்பவர், அவரது மகனான சவுரப்பை (8) மாலையில் உணவு உட்கொள்ள வருமாறு அழைத்துள்ளார்.

ஆனால், சிறுவன் சவுரப் உணவு உட்கொள்ள மறுத்துள்ளார். இதனையடுத்து சிறுவனின் தந்தை, சிறுவனை குச்சியால் கடுமையாக தாக்கியுள்ளார். வீட்டை விட்டு வெளியே ஓடிய சிறுவன் கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து நேரம் செல்ல செல்ல சிறுவனின் உடல்நிலை மோசமைடைந்துள்ளது.

இந்நிலையில், சிறுவனை ராஜ்கோட்டில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். குழந்தையின் உடலில் பல காயங்கள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து சவுரபின் தந்தையிடம் போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது, அவர் சிறுவன் விளையாடும்போது விழுந்து தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதாக கூறினார். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், சிறுவனை குச்சியால் அடித்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து சித்தராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து – முதல்வர் மு.க ஸ்டாலின் நிவாரணத்தொகை அறிவிப்பு..!

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து – முதல்வர் மு.க ஸ்டாலின் நிவாரணத்தொகை அறிவிப்பு..!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…

1 minute ago

இளைஞர் அஜித்குமார் மரணம்: மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் சஸ்பெண்ட்.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…

31 minutes ago

இளைஞர் மரணம்: “தகவல் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் ஸ்டாலின்.!

சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…

46 minutes ago

நெஞ்சை உலுக்கும் காட்சி.., அஜித் குமாரை போலீசார் பிரம்பால் தாக்கிய வீடியோ.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…

1 hour ago

போலீஸ் அடித்ததில் அஜித்துக்கு சிறுநீரில் ரத்தம் வந்தது” நேரில் பார்த்தவர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை :மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…

2 hours ago

அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…

3 hours ago