கொரோனா  தடுப்பூசிகளைக் கொண்டு வருவதில் வெற்றி – பிரதமர் மோடி

The Indian scientists have been successful in coming up with two 'made in India' COVID19 vaccine - PM Naredra Modi

உலகின் மிகப்பெரும் தடுப்பு மருந்து வழங்கும் திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தேசிய அளவியல் மாநாட்டை தொடங்கி வைத்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,உலகின் மிகப்பெரும் தடுப்பு மருந்து வழங்கும் திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் நாம் உள்ளோம். முழு நாடும் நமது விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்பவாதிகளுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது.

நமது நாட்டின் பொது மற்றும் தனியார் துறைகளின் சேவைகள் மற்றும் பொருட்களின் தரம், உலகளவில் இந்தியாவின் வலிமையை நிர்ணயிக்கும்.எந்த ஒரு வளர்ந்துவரும் சமூகத்திலும் ஆராய்ச்சி மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. அதன் தாக்கம் நமது சிந்தனை மற்றும்  அணுகுமுறையை விசாலமாக்குகின்றது.இந்திய விஞ்ஞானிகள் இரண்டு ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா  தடுப்பூசிகளைக் கொண்டு வருவதில் வெற்றி பெற்றுள்ளனர். நாடு அதன் விஞ்ஞானிகளை நினைத்து நாடு பெருமை  அடைகிறது என்று தெரிவித்துள்ளார்