கேரளா:சபரிமலைக்கு வரும் 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா நெகடிவ் (ஆர்டி-பிசிஆர் சோதனை) சான்றிதழ் தேவையில்லை என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
மிகவும் பிரபலமான சபரிமலை திருவிழாவை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கேரள அரசு, ஆர்டி-பிசிஆர் சோதனை சான்றிதழ் இல்லாமல் சபரிமலை யாத்திரைக்கு 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை அனுமதிக்கலாம் என்று அறிவித்துள்ளது.எனினும்,குழந்தைகள் சோப்பு, சானிடைசர், முகமூடி போன்றவற்றை வைத்திருப்பதையும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும் உறுதி செய்யுமாறு பெற்றோர்கள் அல்லது குழந்தைகளுடன் வரும் பிற பெரியவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். கூடுதலாக, குழந்தைகளின் உடல்நலப் பிரச்சினைகளுக்கும் அவர்கள் பொறுப்பாவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால்,பெரியவர்கள் கோவிலுக்குள் நுழைவதற்கு முழு தடுப்பூசி சான்றிதழ் அல்லது 72 மணிநேரத்திற்குள் எடுத்த ஆர்டிபிசிஆர் (RTPCR) எதிர்மறை சான்றிதழ் கட்டாயம் என தெரிவித்துள்ளது.
சபரிமலை திருவிழாவை சுமூகமாக நடத்துவதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் மாநில கொரோனா நெறிமுறைகளின்படி கேரள அரசு இதனை அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…