பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட நபர் 11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் குடும்பத்துடன் இணைந்தார்!

Banwasi Lal hails from Mirzapur, Uttar Pradesh. He has been reunited with his family after 11 years in a Pakistani prison.

உத்தரப் பிரதேச மாநிலம், மிர்சாபூரை சேர்ந்தவர் பன்வாசி லால். இவர் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 11 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தனது குடும்பத்துடன் சேர்ந்துள்ளார்.

பன்வாசி லால் மனநிலை சரியில்லாதவர் ஆவார்.  இவர் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இவர் 2020 நவம்பர் 17 அன்று அட்டாரி எல்லை வழியாக ஒப்படைக்கப்பட்ட நிலையில், மனநிலை காரணமாக அவர் வீட்டிற்கு செல்லும் வழி தெரியாது. அவரை மீண்டும் அழைத்து வர அவரது குடும்பத்தினர் அமிர்தசரஸ் சென்றனர். ஜனவரி 4-ஆம் தேதி அவர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பன்வாசி லால் பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது பதவிக்காலம் முடிந்ததும் அவரை இந்தியாவுக்கு ஒப்படைத்ததாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். அவரது குடுமபத்தினர், கடந்த 11 ஆண்டுகளாக பன்வாசி லால் காணவில்லை என்றும், அவர் எப்படி பாகிஸ்தானை அடைந்தார் என்பது குறித்து அவர்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.