நாம் இனி உச்சரிக்க வேண்டிய மந்திரம் vocal for local – பிரதமர் மோடி

நாம் இனி உச்சரிக்க வேண்டிய மந்திரம் vocal for local.

நாம் இனி உச்சரிக்க வேண்டிய மந்திரம் vocal for local.

நாடு முழுவதும் இன்று 74-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. மோடி செங்கோட்டையில், 7-வது முறையாக தேசிய கொடியை ஏற்றி மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

அவர் பேசுகையில், கொரோனா காலத்தில்  இந்தியாவில் அந்நிய முதலீடுகள் அதிகரித்துள்ளன என்றும், உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் இந்தியா மீது நம்பிக்கை வைத்துள்ளன என்றும், நமது சீர்திருத்தங்களால் பல நாடுகள் நம் மீது நம்பிக்கையை அதிகரித்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் தயாரிப்புகளுக்கு குரல் கொடுப்போம் என்பது இனி நமது மந்திரம் என்றும், உலகப் பொருளாதாரத்தில் இந்திய பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.