இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது .
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக ஊரடங்கு உத்தரவு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.தொடர்ந்து கொரோனா தொடர்பான பரிசோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இந்தியாவில் தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது . நாடு முழுவதும் 23, 077 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் .இந்தியாவில் கொரோனா உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 718 ஆக அதிகரித்துள்ளது.4749 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர் .இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 5,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. மகாராஷ்டிராவில் 6,430 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . கொரோனா பாதிப்பால் 840 பேர் குணமடைந்துள்ள நிலையில் 283 பேர் உயிரிழந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025