மகனை மீட்க காவல் நிலையத்திற்கு சென்ற பெண்ணை மசாஜ் செய்யுமாறு வற்புறுத்திய காவலர் …!

காவல்நிலையங்களுக்கு ஏதேனும் பிரச்சனைக்காக செல்லும் பொழுது சில காவலர்கள் மக்களின் நிலை அறிந்து உதவுவது உண்டு. ஆனால் ஒரு சில காவலர்கள் காவல் நிலையத்துக்கு வரக்கூடிய பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதும் பல இடங்களில் பிரச்சினைகளை உருவாக்கி விடுகிறது.
அந்த வகையில் தற்போது பீகார் மாநிலத்தில் உள்ள சஹாரா எனும் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் தனது மகனை விடுவிக்குமாறு சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணிடம் காவலர் நடந்து கொண்ட விதம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
ஏனென்றால், சஹாரா பகுதியிலுள்ள காவல் அதிகாரி அந்த பெண்ணிடமும் மகனை விடுவிக்க வேண்டுமானால் தனக்கு மசாஜ் செய்து விடுமாறு கேட்டுள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணும் காவல்துறை அதிகாரிக்கு மசாஜ் செய்து விடுகிறார்.
மேலும், அந்த போலீஸ்காரர் வழக்கறிஞரும் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் அந்த காவல் துறை அதிகாரியிடம் விசாரணையும் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025