நாளையும் திறக்கப்படும் பங்கு சந்தை… எவ்வளவு நேரம் தெரியுமா..?

Published by
murugan

நீங்கள் பங்குச் சந்தை வர்த்தகம் செய்கிறீர்கள் என்றால், இது உங்களுக்கு முக்கியமான செய்தி. உண்மையில், வெள்ளிக்கிழமை பங்குச்சந்தையில் வாரத்தின் கடைசி வர்த்தக நாள். பங்குச் சந்தையில் திங்கள் முதல் வெள்ளி வரை வர்த்தகம் நடைபெறுகிறது. அதே நேரத்தில், வார இறுதி நாட்களில் பங்குச்சந்தை விடுமுறை நாட்களாக உள்ளன. அதாவது, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச் சந்தை மூடப்பட்டிருக்கும்.

ஆனால் இந்த வாரம் பங்குச்சந்தை சனிக்கிழமை அதாவது நாளை திறந்திருக்கும். இந்த வாரம் நீங்கள் பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்து சம்பாதிக்க இன்னும் ஒரு நாள் உள்ளது. நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ( NSE ) மற்றும் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ( BSE ) அளித்த தகவலின்படி, நாளை அதாவது சனிக்கிழமை பேரிடர் மீட்பு தளத்தில் சிறப்பு வர்த்தக அமர்வு நடைபெறும்.

இந்தத் தகவல் சுற்றறிக்கை மூலம்  பங்குச் சந்தையால் தெரிவிக்கப்பட்டது. இந்த வாரம் சந்தையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாரம் சென்செக்ஸ் ஒரே நாளில் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. நிஃப்டியிலும் இந்த மாதிரி சரிவுவை கண்டுள்ளது. சந்தையில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சியிலிருந்து மீள, NSE மற்றும் BSE -வில் சிறப்பு அமர்வு நாளை திறக்கப்படுகிறது. சந்தையில் ஏற்பட்ட சரிவை மீட்பதற்காக முக்கிய பங்குச் சந்தைகளான NSE மற்றும் BSE  முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி!

பங்கு மற்றும் ஈக்விட்டி டெரிவேட்டிவ் பிரிவில் சிறப்பு வர்த்தக அமர்வு சனிக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  சந்தை நாளை இரண்டு அமர்வுகளில் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் PR அமர்வு காலை 9.15 மணி முதல் 10 மணி வரை நடைபெறும். இரண்டாவது DR தளம் காலை 11.30 மணி முதல் 12.30 மணி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

நாசா – இஸ்ரோ கூட்டு முயற்சி.., விண்ணில் சீறி பாய்ந்தது ‘நிசார்’ செயற்கைக்கோள்.!

ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…

10 minutes ago

”பாஜக மாநில துணைத் தலைவராக குஷ்பு நியமனம்” – தமிழ்நாடு பாஜக தலைவர் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் ஒப்புதலுடன் இந்த…

31 minutes ago

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி.., கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்..!

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று (ஜூலை 30 ) 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது இதுவரை பதிவு…

59 minutes ago

”மெல்லக்கூடிய புகையிலை பயன்படுத்தினால் அபராதம்” – மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி.!

சென்னை : மெட்ரோ இரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதை மீறினால் அபராதம் விதிக்கப்படும்…

2 hours ago

கவின் ஆணவக் கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் – டிஜிபி அறிவிப்பு.!

சென்னை : நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி (CBCID) விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக…

2 hours ago

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் கனமழை வெளுத்து வாங்கும்.! எங்கெல்லாம் தெரியுமா.?

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…

3 hours ago