பிரதமர் மோடியின் தலைமையால் உலகம் புதிய இந்தியாவை பார்க்கிறது..! ஜெய்சங்கர்

பிரதமர் மோடியின் தலைமையால் உலகம் புதிய இந்தியாவை பார்க்கிறது என ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளுக்கான பயணத்தை முடித்துவிட்டு நேற்று டெல்லிக்கு விமானம் மூலம் புறப்பட்டார். பயணம் முடிந்து இந்தியா வந்த பிரதமர் மோடியை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி.நட்டா மற்றும் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெளியறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையால் உலகம் புதிய இந்தியாவை பார்க்கிறது என்றும் பப்புவா நியூ கினியா பிரதமர், மோடியை விஸ்வ குரு என்றும் ஆஸ்திரேலிய பிரதமர், மோடியை தி பாஸ் என்று அழைத்ததாகவும் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கூறிய அவர், பிரதமர் மோடிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இன்று இந்தியாவின் புகழ் மற்றும் உலக அளவில் இந்தியாவின் இடம் இவ்வளவு உயர்ந்துள்ளது என்றால் அதற்கு பிரதமர் மோடி தான் காரணம், எனக்கு இது ஒரு புது தொடக்கம் என்று நான் கூறுவேன் என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.