இன்னும் 6 வாரங்களுக்கு தான் தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கும் – மத்திய அரசு உறுதி!

Default Image

நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு பல மாநிலங்களில் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இன்னும் 6 வாரங்களுக்கு மட்டுமே தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கும் என மத்திய அரசு உறுதிபடக் கூறியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. 150 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நமது இந்திய நாட்டில் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கான தட்டுப்பாடு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து தற்பொழுது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடும் திட்டம் அமலில் உள்ள நிலையில், இந்த தடுப்பூசி தட்டுப்பாடு மேலும், இடையூறாக உள்ளதாக பலர் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து தெரிவித்துள்ள கோவிட் -19 பணி குழுவின் தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு தலைவம் வல்லுநருமான டாக்டர் என்.கே.அரோரா அவர்கள், இந்தியாவில் தடுப்பூசி தொடர்பான முடிவுகள் அனைத்தும் அறிவியல் ஆதாரங்களை பயன்படுத்தி எடுக்கப்படுவதாகவும், இந்த கொரோனா வைரஸ் சிலகாலம் இருக்கக் கூடியது தான் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம் எனவும், மக்கள் போதுமான அளவில் இதில் இருந்து பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த தாங்கள் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனாவில் இருந்து மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் முன்னோக்கி நடைபோடுகிறோம் எனவும் தெரிவித்துள்ளார். தடுப்பூசி பற்றாக்குறை என்பது அடுத்த ஆறு வாரங்களுக்கு மட்டும் தான் என்பதை நான் இங்கே சொல்ல விரும்புகிறேன் எனவும், ஜூலை மாதம் முதல் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தி மாதமொன்றுக்கு 20 முதல் 25 கோடி டோஸ்கள் வரை அதிகரிக்கும் என தாங்கள் அறிந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை தவிர்த்து ஜைடஸ் கேடிலா, ஸ்புட்னிக் வி, ஜான்சன் அண்ட் ஜான்சன்  மாதங்களில் பெற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
scattered missile parts
Indian Army Pulverizes Terrorist Launchpads
Virat Kohli - TEST Cricket
Vikram Misri
Volunteers for INDIAN ARMY
Sofiya Qureshi