அந்தமானில் வசிக்கும் எனது சகோதர, சகோதரிகளுக்கு இன்று சிறப்பான நாள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சென்னை-போர்ட்பிளேர் இடையே கடலுக்குள் அமைக்கப்பட்ட ஃபைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.இதற்காக கடந்த 2018 டிசம்பர் மாதம் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள பதிவில்,அந்தமான் நிகோபரில் வசிக்கும் எனது சகோதர, சகோதரிகளுக்கு இன்று விசேஷமான நாள். அந்தமான் நிகோபர் தீவுகளுக்குக் கடலுக்கு அடியில் கொண்டு செல்லப்பட்டுள்ளஃபைபர் ஆப்டிக் கேபிள்இணைப்பு இன்று காலை 10.30 மணிக்குத் தொடங்கி வைக்கப்படுகிறது என்று பதிவிட்டுள்ளார்.
unknown node