இடிக்கப்பட்ட பாபர் மசூதி..28 வருடங்கள் நடைபெற்ற வழக்கு இன்று தீர்ப்பு

இன்று தீர்ப்பளிக்கிறது பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம்
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிபிஐ, பாஐக மூத்த தலைவர்களான எல்.கே அத்வானி,முரளி மனோகர் ஜோஷி,உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் என 48 பேர் மீது வழக்கு பதிவு செய்தது லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 16 பேர் விசாரணை காலத்திலேயே உயிரிழந்தனர்.
இதனிடையே வழக்கை தினசரி நடத்தி இரண்டு ஆண்டுகளில் விசாரணையை முடிக்குமாறு கடந்த 2017ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.அதன்படி பாபர் மசூதி தொடர்பான வழக்கில் நீதிபதி எஸ்.கே யாதவ் இன்று தீர்ப்பு வழங்க உள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால், பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுக்காப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025