மூத்த குடிமக்கள் கூட கொடிய வைரஸை எதிர்த்துப் போராடத் தயாராக உள்ளனர் – பிரதமர் மோடி பேச்சு

Today even the senior citizens of our country are ready to fight the deadly virus- PM Narendra Modi says today

இன்று நம் நாட்டின் மூத்த குடிமக்கள் கூட கொடிய வைரஸை எதிர்த்துப் போராடத் தயாராக உள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வாரணாசியில் கொரோனா தடுப்பூசி பயனாளிகளுடனும், தடுப்பூசியை செலுத்துபவர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி, காணொலிக் காட்சி வாயிலாக உரையாடினார்.இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், தடுப்பூசி குறித்து இரவும் பகலும் பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .கொரோனாவிற்க்கு எதிரான போராட்டத்திற்கு  கழிப்பறைகள் மற்றும் சுத்தமான குடிநீர் ஆகியவை சிறப்பான பங்களித்தன.இன்று நம் நாட்டின் மூத்த குடிமக்கள் கூட கொடிய வைரஸை எதிர்த்துப் போராடத் தயாராக உள்ளனர்.மருத்துவமனைகள் தங்கள் இலக்குகளை நிர்ணயிக்கவும், தடுப்பூசி இயக்கத்தை துரிதப்படுத்தவும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசியுள்ளார்.