காருக்குள் இருந்து துப்பாக்கி காயங்களுடன் மீட்கப்பட்ட இரண்டு உடல்கள்..!

Default Image

இன்று காலை டெல்லியில் உள்ள ரோகிணி பகுதியில்  ஒரு கார் பார்க்கிங்கில் செக்டர் 13 இல் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் சடலங்கள் இருந்தன. இருவரும் துப்பாக்கி காயங்களுடன் இறந்து கிடைத்தனர்.

இறந்த ஆண் நபர் தனது உரிமம் பெற்ற ரிவால்வர் மூலமாக அந்த பெண்ணை சுட்டுக் கொன்றதாகவும் , பின்னர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து  டி.சி.பி மிஸ்ரா கூறுகையில் , இறந்தவர்கள் ஓம்பிரகாஷ் குக்ரேஜா (62), சுதிப்தா முகர்ஜி (55) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காலை 7:30 மணியளவில்  நிகழ்ந்ததாக தெரிகிறது என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts