வெங்காயத்தை வேரோடு கொள்ளையடித்த மர்ம கும்பல்..! குமுறி அழுத விவசாயி ..!

Default Image

தற்போது வெங்காயத்தின் விலை உச்சத்தை எட்டி உள்ளது. ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 100 முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.வெங்காயம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

தற்போது உள்ள கொள்ளையர்கள் தங்கம் நகைகளை கொள்ளை அடிப்பதற்கு பதிலாக வெங்காயத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் சிவபுரி மாவட்டத்தில் 21 லட்சம் மதிப்புள்ள வெங்காயத்தை  நாசிக்கில் இருந்து லாரி மூலம் கொண்டு வந்த போது மர்ம நபர்கள்  நடுவழியில் வைத்து கொள்ளையடித்து சென்றனர்.

இந்நிலையில் இதைத் தொடர்ந்து மற்றொரு வெங்காய கொள்ளை சம்பவம் மத்திய பிரதேசத்தில் மீண்டும் அரங்கேறியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள  மான்சூர் பகுதியில் உள்ள கிராமத்தில் ஜிதேந்திரா என்பவர் 1.6 ஏக்கர் நிலத்தில் வெங்காய சாகுபடி செய்திருந்தார்.

வெங்காயம் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் நிலத்தில் புகுந்த கொள்ளையர்கள் 7 குவிண்டால் வெங்காயத்தை கொள்ளை அடித்துச் சென்றனர். நேற்று காலை வழக்கம் போல ஜிதேந்திரா வயலில் வெங்காயம் கொள்ளையடிக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் ஜிதேந்திரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். கொள்ளை அடிக்கப்பட்ட வெங்காயத்தின்  மதிப்பு 30 ஆயிரம் எனவும் வெங்காயத்தைத் வேரோடு  திருடிச் சென்றதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts