ஆப்பிள் நிறுவனத்தின் ஊழியர் உத்தரப்பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குழு அமைத்துள்ளார்.
இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
unknown nodeஆப்பிள் நிறுவன ஊழியரான விவேக் திவாரி என்பவர் கோம்டி நகர் அருகே காரில் சென்ற போது வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீசாரை கண்டதும் காரை நிறுத்தாமல் சென்றுள்ளார்.அப்போது காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் பலியானார். இதில் பிரசாந்த் சவுத்ரி என்பவர் உள்பட 2 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தயார் என்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இதனிடையே தவறுதலாக சுட்டு விட்டதாக காவலர் பிரசாந்த் சவுத்ரி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் இந்த சம்பவம் ஆப்பிள் நிறுவனம் தன் ஊழியரின் துப்பாக்கி சூடு குறித்து அதிர்ச்சி அடைந்துள்ளது.
DINASUVADU