உத்தர பிரதேசம் : முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் மரணம் – 3 நாள் துக்க அனுசரிப்பு!

3-day mourning announcement for former Uttar Pradesh Chief Minister Kalyan Singh

உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 3 நாள் துக்க அனுசரிப்பு அறிவிப்பு.

உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமாகிய கல்யாண் சிங் அவர்கள் ஏற்கனவே ஜூலை மாதம் நான்காம் தேதி உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு, சிறுநீரக கோளாறு, இதயக்கோளாறு மற்றும் நரம்பியல் பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று உடல்நிலை மோசமடைந்ததால் இவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டது.

செப்ஸிஸ் மற்றும் உறுப்பு செயலிழப்பு காரணமாக இவர் நேற்று சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக உத்திரபிரதேச மாநிலத்தில் அடுத்த 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.