சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட சிலர் ஹரியானா முகாமில் உள்ளனர்.அவர்களில் 6 பேர் முகத்தில் கவசம் அணிந்தபடி உற்சாகமாக நடனம் ஆடும் வீடியோ வைரலாகி உள்ளது.
இந்த கொரோனா வைரஸ் தாக்கியதில் இதுவரை சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 361ஆக உயர்ந்துள்ளது.
உற்சாக நடனம் :
சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட சிலர் ஹரியானா முகாமில் உள்ளனர்.அவர்களில் 6 பேர் முகத்தில் கவசம் அணிந்தபடி உற்சாகமாக நடனம் ஆடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தங்களுக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா..? இல்லையா? என என தெரியாமல் கவலை இன்றி அந்த வாலிபர்கள் ஆடும் இணைதளத்தில் அந்த வீடியோவை பரவி வருகிறது.
கொரோனா வைரஸ்:
சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் பெய்ஜிங் , ஷாங்காய் ,ஹூபே போன்ற பல நகரங்களில் பரவி உள்ளது. இதனால் பலியானோர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டு வருகிறது.
unknown nodeபலி எண்ணிக்கை:
இந்த கொரோனா வைரஸ் தாக்கியதில் இதுவரை சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 361ஆக உயர்ந்துள்ளது. அதேபோல இந்த வைரசால் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக சீனா அரசு அதிகாரப்பூர்வ கூறியுள்ளது. நேற்று மட்டும் 56 பேர் இறந்து உள்ளனர்.
சீனாவில் இருந்து வந்த இந்தியர்கள்:
கொரோனா வைரஸ் சீனாவில் அதிகரித்து கொண்டு இருப்பதால் வுகான் நகரில் உள்ள இந்தியர்களை ஏர் இந்தியா விமானங்கள் மூலம் கடந்த 2 நாட்களாக டெல்லி அழைத்து வரப்பட்டார்கள்.அவர்களுக்கு விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு அனைவரும் ஹரியானா ,டெல்லி பகுதிகளில் உள்ள ராணுவ மருத்துவ முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். அழைத்து வரப்பட்ட அனைவரும் அங்கு 14 நாட்கள் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பார்கள்.