தமிழ், தெலுங்கு, இந்தி என இந்தியா முழுவதும் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை விஜயசாந்தி. இவர் சினிமாவினை தொடர்ந்து, அரசியலிலும் களமிறங்கினார். 1998-ஆம் ஆண்டு பிஜேபியில் சேர்ந்தார். அங்கு மகளிரணி பொறுப்பை ஏற்று வந்தார். அதனை அடுத்து தள்ளி தெலுங்கானா எனும் கட்சியை தொடங்கினார்.
பின்னர் அந்த கட்சியை சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியுடன் இணைத்து கொண்டார். தெலுங்கானாவில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வந்துள்ளார்.
அதனை அடுத்து 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்த இவர், தற்போது காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி பிஜேபியில் சேர்வதற்காக ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக பிஜேபி தேசிய செயலாளர் முரளிதரராவ் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். வரும் அக்டோபர் 8ம் தேதி பிஜேபியில் சேர்ந்துவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இவர் இந்தியா முழுவதும் தெரிந்த முகமாக இருப்பதால், வரும் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் நட்சத்திர பேச்சாளராக பிஜேபி சார்பில் களமிறக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…