"வெற்றி பெறுவோம் அல்லது உயிரை விடுவோம்" – வாசகத்தால் பரபரப்பு

In talks with the federal government, representatives of the farmers' unions have written at the table, "We will win or we will die."

விவசாய சங்க பிரநிதிகள், மேஜையில் வெற்றி பெறுவோம் அல்லது உயிரை விடுவோம் என்ற வாசகத்தை எழுத்துவைத்துள்ளனர்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களி திரும்பப்பெற வலியுறுத்தி கிட்டத்தட்ட 40 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் கடும் குளிர், மழை எதையும் பார்க்காமல் தொடர்ந்து 44-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று வருகின்றனர். புதிய சட்டங்களை திரும்ப பெறுதல், குறைந்த ஆதார விலையை உறுதிப்படுத்துதல் போன்றவைகள் விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது

மத்திய அரசு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் இதுவரை நடந்த 7 கட்ட பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை. இன்று டெல்லியில் மீண்டும் விவசாயிகள் – மத்திய அரசுக்கு இடையேயான 8ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதுவும் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் ஆகியோர் பங்கேற்றனர். இதனிடையே, மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ள விவசாய சங்க பிரநிதிகள், மேஜையில் வெற்றி பெறுவோம் அல்லது உயிரை விடுவோம் என்ற வாசகத்தை எழுதி வைத்துள்ளது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.