இன்று நடைபெறும் மேற்கு வங்க இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தான் போட்டியிடும் தொகுதியில் 28,825 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார்.
கடந்த மே மாதம் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார். இந்நிலையில், முதல்வராக பதவியேற்ற 6 மாதத்திற்குள் எம்எல்ஏவாக பதவி ஏற்காத பட்சத்தில் முதல்வர் பதவியில் இருந்து மம்தா பானர்ஜி இறங்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் மம்தா பானர்ஜி தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக பவானிபூர் எம்எல்ஏவும், வேளாண் அமைச்சரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் செப்டம்பர் 30 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பவானிபூர் தொகுதியில் நடைபெற்ற இடை தேர்தலில் பாஜக சார்பில் பிரியங்கா திப்ரே மம்தா பானர்ஜிக்கு எதிராக போட்டியிட்டார். இன்று இந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதற்கு முன் இரு முறை பவானிபூரில் மம்தா பானர்ஜி போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், தற்போதும் ஒன்பது சுற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் 28,825 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார். இதனையடுத்து கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் குடியிருப்புக்கு வெளியே அவரது ஆதரவாளர்கள் ஆட்டம் பாட்டத்துடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…