கொரோனாவால் தடைப்பட்ட சேவை ! மீண்டும் தொடங்குகிறது விமான சேவை ?

Default Image

இந்தியாவில் சர்வதேச  விமான போக்குவரத்து சேவை விரைவில் தொடங்க உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந்த சமயத்தில் பள்ளிகள்,கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டது.இந்த சமயத்தில் நாடு முழுவதும் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.குறிப்பாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக, இந்தியாவில் அனைத்து சர்வதேச விமானங்களுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், . அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இந்தியா ‘ஏர் பப்பில்ஸ்’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது; பல்வேறு இந்திய நகரங்களிலிருந்து இந்த இடங்களுக்கான சர்வதேச விமானங்கள் போக்குவரத்து  மீண்டும் தொடங்கப்படவுள்ளன.இது ஒப்பந்தத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டின் விமான நிறுவனங்களின் சர்வதேச விமானங்களை இயக்க அனுமதி அளிக்கப்படும். இங்கிலாந்துடன் இதேபோன்ற ஒப்பந்தம் விரைவில் ஏற்படுத்தப்படும்.டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் பாரிஸ் இடையே ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 1 வரை ஏர் பிரான்ஸ் 28 விமானங்களை இயக்கவுள்ளது என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி  தெரிவித்துள்ளார். இதனால் இந்தியாவில் சர்வதேச  விமான போக்குவரத்து சேவை விரைவில் தொடங்க உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts