பிரதமர் மோடி:1972-ம் ஆண்டு ஜூன்-5ம் தேதி அன்றி ஐக்கிய நாடுகள் சபையின் மனித சுற்றுச்சூழல் மாநாடு ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்றது. அதனால் இந்த நாளை கௌரவிக்கும் வகையில், 1973-ம் ஆண்டிலிருந்து உலகம் முழுவதும் இந்த உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடியது.
அதன்படி டெல்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரான பூபேந்தர் யாதவ் மற்றும் டெல்லி டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா ஆகியோருடன் பிரதமர் மோடி இந்த நாளை கௌரவிக்கும் வகையில் கொண்டாடி வருகின்றார்.
மேலும், அவர்களுடன் இணைந்து மரக்கன்று ஒன்றை நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி ‘ஏக் பெட் மா கே நாம்’ என்ற பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். அவர் மரக்கன்றை நட்டு அதற்கு தண்ணீர் ஊற்றும் வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown node