சீனாவில் உருவாகி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் மிக பயங்கரமான உயிர்கொல்லி வைரஸ் தான் கொரோனா. இது இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா, ரஷ்யா என பல நாடுகளை ஆக்கிரமித்து வருகின்ற நிலையில், தற்பொழுது இந்தியாவையும் பாதித்துள்ளது. எனவே இந்தியா முழுவதும் இருபத்தி ஒரு நாளைக்கு ஊரடங்கு உத்தரவு மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
unknown nodeஇதனால் ஆலயங்கள், கல்விக்கூடங்கள் மற்றும் முக்கியமாக மது விற்பனை செய்யும் இடங்கள் அனைத்துமே மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், கேரளாவில் மது விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் மது பிரியர்கள் மது கிடைக்காமல் மிகவும் கவலைப்பட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து தற்போது கேரளாவில் உள்ள 35 வயதுடைய சனோஜ் என்னும் ஒருவர் தற்போது மது கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் இரண்டு நாட்கள் மது கிடைக்காமல் தத்தளித்ததாகவும் அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். மது கிடைக்கவில்லை என்பதற்காக உயிரிழந்த சனோஜின் செயல் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.