உ.பி : துப்பாக்கி சூடு..இளைஞர் பலி! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரபிரதேசம் : மீரட்டி பகுதியில் உள்ள நீச்சல் குளத்தில் 25 வயது இளைஞரை துப்பாக்கியால் சுடும் அதிர்ச்சியான சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேசம் :மீரட்டி பகுதியில் உள்ள நீச்சல் குளத்தில் 25 வயது இளைஞரை துப்பாக்கியால் சுடும் அதிர்ச்சியான சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜெய் நகரைச் சேர்ந்த அமீர் அகமது என்பவரின் மகன் அர்ஷாத், குழந்தைகளுடன் நீச்சல் குளத்தில் குளிக்க சென்று கொண்டிருந்தபோது, ​​மர்ம நபர்கள் குறி வைத்து துப்பாக்கிசூடு நடத்தியதில் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

உயிரிழந்த அர்ஷத் மற்றும் தற்போது தலைமறைவாக உள்ள  பிலால் மற்றும் டேனிஷ் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. எனவே, இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி, தலைமறைவான மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

unknown node