தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு நீதி வேண்டும் அரசியல் கட்சியினர், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
unknown nodeஇந்நிலையில், சாத்தான்குளம் சம்பவம் காவல்துறைக்கு ஏற்பட்டுள்ள களங்கம் என்றும் இவர்கள் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எத்தனை உதவிகள் கிடைத்தாலும் ஜெயராஜ் அவர்களது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும். ஜெயராஜ் குடும்பத்தினருக்கும் , நண்பர்களுக்கும் மீண்டும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார் .
மேலும், நேர்மையான விசாரணை குற்றவாளிகள் கிடைக்கும் உரிய தண்டனை இதன் மூலம்தான் இந்த களங்கம் துடைக்கப் படும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அறிக்கை வெளிட்டு உள்ளார்.