10 சதவீத இடஒதுக்கீடு மசோதா_வை வைத்து பாஜக ஆட்சியை பிடிக்காது.... திருமாவளவன் குற்றசாட்டு...!!

10 சதவீத இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டதை எதிர்த்தும் , அந்த மசோதாவை திரும்ப பெற கோரி சென்னை சேப்பாக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன

10 சதவீத இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டதை எதிர்த்தும் , அந்த மசோதாவை திரும்ப பெற கோரி சென்னை சேப்பாக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், 10 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்தியதன் மூலம், பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடிக்காது. இந்த 10 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை திரும்பப் பெறும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.