மருத்துவப் படிப்பில் 10% இட ஒதுக்கீடு – மத்திய அரசு பதில் மனு.!

மருத்துவப்படிப்பில் 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அமல்படுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திவ்யதர்ஷினி என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், புதுச்சேரி மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு தந்தால், நீட் தேர்வின் தகுதி நீர்த்துப்போக செய்யும் என மத்திய அரசு பதில் மனுவில் தெரிவித்துள்ளது. புதுச்சேரி அரசின் சட்டம் குறித்து முடிவு செய்ய 6 வார கால அவகாசம் வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் உள்ள 7.5% இட ஒதுக்கீடு சட்டம் பற்றி தங்களது கவனத்திற்கு வரவில்லை என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. பின்னர் திவ்யதர்ஷினி என்பவர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் நீதிபதி புகழேந்தி 4 வாரத்துக்கு ஒத்திவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
போரால் மகனின் திருமணம் 2 முறையாக ரத்து.! இஸ்ரேல் அதிபரின் சர்ச்சை பேச்சு.., கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.!
June 20, 2025
“ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ED சோதனை செய்ய அதிகாரம் இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!
June 20, 2025