இந்த 6 ஊராட்சிகளுக்கு தலா ரூ.15 லட்சம்! முன்மாதிரி கிராமங்களுக்கு பரிசு வழங்கினார் முதலமைச்சர்!

தமிழகத்தில் மாநில அளவிலான சிறந்த சுகாதார செயல்பாடுகளுக்கான, முன்மாதிரி கிராம விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு பரிசுத்தொகையும், கேடயமும்

villages award

தமிழகத்தில் மாநில அளவிலான சிறந்த சுகாதார செயல்பாடுகளுக்கான, முன்மாதிரி கிராம விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு பரிசுத்தொகையும், கேடயமும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.  சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், 2021-22, 2022-23-ஆம் ஆண்டுக்கான சுகாதார முன்மாதிரி கிராம விருதை முதலமைச்சர் வழங்கினார்.

அதன்படி, இந்த விருதிற்கு தேர்வான 6 ஊராட்சிகளுக்கு தலா ரூ.15 லட்சம் பரிசு, கேடயம் வழங்கப்பட்டது. மேல்மருவத்தூர், குளூர், நிபஞ்சப்பட்டி, நட்டாத்தி, நாயக்கன்பாளையம் மற்றும் அரியனேந்தல் ஆகிய 6 ஊராட்சிகளுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின். மாநில அளவில் சிறந்த சுகாதார செயல்பாடுகளுக்கான கிராம விருது ஊரக வளர்ச்சி துறை சார்பில் வழங்கபடுகிறது.

unknown node