புதுச்சேரியில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 20,100 வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், சிலர் தேவையில்லாமல் வெளியே சுற்றி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு நூதன முறையில் தண்டனை வழங்கி, வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 2,71,389 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறியதாக இதுவரை 2,55,538 வழக்குகள் பதிவு போடப்பட்டுள்ளது. வெளியே சுற்றிய 2,27,325 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஒரு கோடியே 46 லட்சத்து 66 ஆயிரத்து 994 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரியில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 20,100 வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்கள் 3,001 பேர் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…