செம்மரம் கடத்த முயன்றதாக தமிழர்கள் 48 பேர் கைது!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் செம்பரம் வெட்டி கடத்த முயன்றதாக தமிழ்நாட்டை சேர்ந்த 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது, சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 48 பேர் ஆந்திர மாநிலம் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இரண்டு கார்கள், ஒரு ஆட்டோ, ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.2 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்தது ஆந்திர அதிரடிப்படை.
மேலும், செம்பரம் வெட்டி கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட 48 பேரை திருப்பதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க ஆந்திர அதிரடிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 48 பேர் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.