7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு....!

7 IPS The Government of Tamil Nadu has issued an order to transfer the officers.

7 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

திமுக தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து,ஐபிஎஸ் ,ஐஏஎஸ் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,7 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி,

தமிழ்நாடு சிறப்புப் படை – பட்டாலியன் பிரிவு (மதுரை) கமாண்டண்ட்டாக – தேஷ்முக் ஷேகர் சஞ்சய் நியமனம்.( இதற்கு முன்னர் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யாகப் பதவி வகித்து வந்தார்)

ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யாக- தீபா சத்யன் நியமனம் (இதற்கு முன்னர் ரயில்வே (சென்னை) எஸ்.பி.யாகப் பதவி வகித்து வந்தார்)

ரயில்வே (சென்னை) எஸ்.பி.யாக – இளங்கோ நியமனம்(இதற்கு முன்னர் தமிழ்நாடு சிறப்புப் படை – பட்டாலியன் பிரிவு (மதுரை) கமாண்டண்ட்டாகப் பதவி வகித்து வந்தார்)

செயலாக்கப் பிரிவு (சேலம் மண்டலம்) எஸ்.பி.யாக – ஜெயந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.(இதற்கு முன்னர் கடலோரப் பாதுகாப்புக் குழு (ராமநாதபுரம்) எஸ்.பி.யாகப் பதவி வகித்து வந்தார்)

நில ஆக்கிரமிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு எஸ்.பி.யாக -மகேஷ்குமார்   நியமனம் செய்யப்பட்டுள்ளார்.(இதற்கு முன்னர் செயலாக்கப்பிரிவு (சேலம் மண்டலம்) எஸ்.பி.யாகப் பதவி வகித்து வந்தார்)

ரயில்வே (சென்னை) ஐஜியாக கல்பனா நாயக்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.(இதற்கு முன்னர் பொருளாதாரக் குற்றப்பிரிவு – 2 (நிதி நிறுவனங்கள்) (சென்னை) ஐஜியாகப் பதவி வகித்து வந்தார்)

கல்வி விடுப்பில் இருந்த அபின் தினேஷ் மோதக், பொருளாதார குற்றப்பிரிவு (சென்னை) ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node