கொரோனா சிகிச்சைக்கு 70 தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைக்க முடிவு- சுகாதாரத்துறை!

கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை என புகார் எழுந்த நிலையில், கூடுதலாக 70 தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைக்க சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவுசெய்துள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோன வைரஸின் தாக்கம் அதிகமடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 1,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 22,149 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை என புகார் எழுந்த நிலையில், சென்னையில் கொரோனா சிகிச்சைகளுக்கு படுக்கை வசதிகளை ஏற்படுத்த கூடுதலாக 70 தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைக்க சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவுசெய்துள்ளது.
அதில் முதற்கட்டமாக, 30 தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025