மீண்டும் ஜம்முவில் வெடித்த சண்டை – 4 பயங்கரவாதிகள் சுட்டு கொலை!

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் நடைபெற்ற பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கான துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இன்று அதிகாலை துப்பாக்கிச் சண்டை நடைபெற்று உள்ளது. பிஞ்சோரா என்ற கிராமத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை துப்பாக்கி ஏந்தி வந்த பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து உள்ளனர்.
அதில் 4 பயங்கரவாதிகள் சிக்கிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியானதும் பல மணி நேரங்களாக நடைபெற்ற பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையேயான துப்பாக்கி சண்டை நீடித்துக் கொண்டே சென்றதில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025