மியான்மரில் சிக்கி தவித்த 8 மீனவர்கள் தமிழகம் வந்தடைந்தனர்! அமைச்சர் ஜெயக்குமார் பொன்னாடை போர்த்தி வரவேற்பு!

Default Image

கடந்த ஜூலை மாதம் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 9 பேர் மாயமானதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து தமிழக அரசு அந்த மீனவர்களை தேடும் பணியில் இறங்கியது. இந்த மீனவர்கள் மியான்மரில் தஞ்சம் அடைந்திருப்பதை கண்டறிந்தனர்.

இந்நிலையில், அவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு தீவிரமாக இறங்கிய நிலையில், மியான்மரில் சிக்கி தவித்த மீனவர்கள் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். இதனையடுத்து, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், 8 மீனவர்களையும் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

இதுகுறித்து, அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கூறுகையில், மியான்மரில் சிக்கிய காசிமேடு மீனவர்கள் 78 நாட்களுக்கு பின் சென்னை திரும்பியதாக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்