8 வழிச்சாலை நாட்டிற்கு அவசியமான ஒன்று – தமிழக முதல்வர்

Chief Minister Palanisamy has said that road widening is necessary to avoid accidents, delays, fuel saving and traffic congestion.

விபத்து, காலவிரயம், எரிபொருள் சேமிப்பு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலை விரிவாக்கம் அவசியம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

புரவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆய்வுகள் மேற்கொண்ட நிலையில், நேற்று காலை நாகை மாவட்டத்திற்கு சென்று வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு பின் மெழுகுவத்தி ஏற்றி வழிபட்டார். அதனைதொடர்ந்து நாகூர் தர்காவிலும் வழிபட்டார்.

இதனைத்தொடர்ந்து,  அங்கு புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்  எட்டு வழி சாலை தொடர்பான கேள்விக்கு விளக்கம் அளித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், விபத்து, காலவிரயம், எரிபொருள் சேமிப்பு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலை விரிவாக்கம் அவசியம். எட்டு வழி சாலை மத்திய அரசின் திட்டம். நிலம் கையகப்படுத்தும் மட்டுமே மாநில அரசு. எட்டு வழிசாலை என்பது நீண்ட கால திட்டம். இப்போது தொடங்கினால் கூட முடிய ஆறு ஆண்டுகள் ஆகும் என்றும்,  தொழில் வளர்ச்சிக்கு சாலைகள் அவசியம்  என்றும், வெளிநாடுகளில் அதிகமாக 8 வழிசாலைகள் தான் உள்ளது எனவும் கூறியுள்ளார்.