சட்டவிரோத மது விற்பனை, கள்ளச்சாராயம் தொடர்பாக ஒரே நாளில் 99 பேர் கைது.!

ஊரடங்கு அமலில் இருப்பதால், நாடு முழுவதும் மதுக்கடைகள் இயங்காமல் இருக்கின்றன. இதனால், சட்டவிரோத மது விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் என பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று போலீசார் அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மட்டுமே தமிழகத்தில் சட்டவிரோதமாக மதுவிற்பனை மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சியது தொடர்பாக 99 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தமாக 211 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தப்பித்துப்போன 112 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
சென்னையில் 9 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி.!
June 2, 2025