ADMK Chief Secretary Edappadi Palaniswami [File image]
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் (எம்ஜிஆர் மாளிகை) இன்று அதிமுக கட்சியை சேர்ந்த அனைத்து மாவட்ட செயலாளர்கள் உடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டமானது அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டணி பற்றி கவலை வேண்டாம்- எடப்பாடி பழனிசாமி..!
இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பற்றி கூறினார். அதில், தற்போது வாக்காளர்கள் பட்டியலில் நிறைய குளறுபடி உள்ளது. ஆளும் திமுக கட்சி வேண்டுமென்றே சில குளறுபடிகளை செய்து அதிமுக வாக்குகளை சிதைக்க பார்க்கிறது. அதனால் மாவட்ட செயலாளர்கள் வாக்காளர்கள் இறுதி பட்டியலை கண்ணும் கருத்துமாக ஆய்வு செய்து அதனை தலைமை தேர்தல் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டிய நிலை உள்ளது என எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியதாக கூறினார்.
மேலும், வரும் ஜனவரி 17ஆம் தேதி புரட்சி தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு செய்ய வேண்டிய நலத்திட்ட உதவிகள் விழாக்கள் பற்றியும், அடுத்து புரட்சி தலைவி அம்மா (ஜெயலலிதா ) பிறந்தநாள் விழாவிலும் செய்ய வேண்டிய நலத்திட்ட விழாக்கள் பற்றியும் ஆலோசனை மேற்கொண்டோம் என்று குறிப்பிட்டார்.
பொதுக்கூட்டங்கள் நடத்தி அதிமுக அரசின் சாதனைகள் பற்றி மக்களுக்கு தெரிவிக்க அதிமுக நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளார் என்றும், தற்போது தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. விலைவாசி, வரி ஆகியவை உயர்ந்துள்ளது. இதுகுறித்து பொதுக்கூட்டங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு எடுத்து கூற வேண்டியது கட்டாயம் என நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…