திமுக ஆட்சியின் மார்க் ஷீட் இதுதான்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.!

Published by
மணிகண்டன்

சென்னை : இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 5வது திட்டக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திட்டக்குழுவின் வரையறை கொள்கைகள், தமிழக அரசுசெயல்படுத்தி வரும் , செயல்படுத்தபோகும் திட்டங்கள் , அதன் செயல்பாடுகள் , அதற்கான நிதி ஆதாரங்கள், சாத்தியக்கூறுகள் என பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்படும்

இன்று நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ,  திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன், தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, கூடுதல் தலைமை செயலாளர் முருகானந்தம், நிதித்துறை முதன்மை செயலாளர் உதயசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நாங்கள் ஆட்சி செய்தாலும் எங்களின் முக்கிய வழிகாட்டியாக உள்ளது, இந்த மாநிலத் திட்டக்குழு தான். இத்திட்டக்குழுவின் அறிக்கை தான் எங்கள் திமுக ஆட்சியின் மார்க் ஷீட். காலை உணவு திட்டத்தால் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது என்பதை விட மகிழ்ச்சியான செய்தி எனக்கு வேறு இல்லை.

மகளிர் உரிமைத்தொகை மூலம் பெண்களின் பொருளாதார சுதந்திரம் முன்னேறியுள்ளத ‘விடியல் பயணம்’ மூலம் பெண்கள் முன்னேற்றமடைந்துள்ளனர்.  ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் மூலம் கல்லூரிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 16 திட்டங்கள் குறித்த அறிக்கையை மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் என்னிடம் வழங்கினார்.  பொருளாதார சமூக நீதி அளவில் ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்பதே திமுக அரசின் நோக்கம்.

மக்களை நேரில் சந்தித்து திட்டங்கள் குறித்த தகவல்களை நேரடியாக பெற்றாலும் புள்ளி விவரங்கள் மூலம் திட்டக்குழுவினர் துல்லியமான அறிக்கைகளை வழங்குகின்றனர். கவனம் பெறாத துறைகளையும் சரிபார்த்து அதற்கான திட்டங்களையும் தயாரித்து தருமாறு மாநில திட்டக்குழுவினருக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெறுமனே ஆலோசனையுடன் நிறுத்திக்கொள்ளாமல் அரசு செயல்படுத்திய திட்டங்கள் மக்கள் மத்தியில் எந்தளவுக்கு சென்றடைந்துள்ளது என ஆய்வு மேற்கொள்ள கூறினார்கள். புதிய திட்டங்களை செயல்படுத்த ஆலோசனைகளை திட்டக்குழு வழங்க வேண்டும்.

பசியில்லை, வறுமையில்லை, பள்ளிகள், குடிநீர் இல்லாத இடங்களே இல்லை என்ற நிலையை நமது அரசு உருவாக்க உள்ளோம்.  சாலை, மின்சாரம், பள்ளிகள் இல்லாத இடங்கள் இல்லை என்ற தன்னிறைவு பெற்றதாக தமிழகத்தை நாம் உருவாக்கியுள்ளோம். நிதிவளம் இருக்குமானால் இன்னும் பல திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதால் நிதிவளம் பெருக்க உரிய ஆலோசனை தாருங்கள் என்று திட்டக்குழு ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

தயவு செஞ்சி வதந்திகளை பரப்பாதீங்க! காந்தாரா-2 படக்குழு வேதனை!

கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…

13 minutes ago

எப்பவும் இந்த கேள்வியை கேட்காதீங்க! கூட்டணி பற்றி கேட்டதால் டென்ஷனான பிரேமலதா!

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி…

33 minutes ago

பதற்றத்தின் உச்சியில் போர்…”ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்க கூடாது” ஜி7 நாடுகள் முடிவு!

கனடா :  கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான்…

55 minutes ago

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

10 hours ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

10 hours ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

12 hours ago