இனப்படுகொலைக்கு தனி ஈழம் ஒன்றே தீர்வு – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

நம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட இடங்களில் இருந்து சிங்களவர்கள் வெளியேற வேண்டும். சிறைபட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். காணாமல்  போனவர்கள் கண்டுபிடிக்கப்பட

நம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட இடங்களில் இருந்து சிங்களவர்கள் வெளியேற வேண்டும். சிறைபட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். காணாமல்  போனவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

இலங்கையில் இனப்படுகொலை நடப்பதாக கூறி, கடந்த 2009-ம் ஆண்டு முத்துக்குமார் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து இவரது 12ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு குளத்தூரில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், ‘  ஐ.நா சபையின் மேற்பார்வையில், நம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட இடங்களில் இருந்து சிங்களவர்கள் வெளியேற வேண்டும். சிறைபட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். காணாமல்  போனவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். இனப்படுகொலைக்கு தனி ஈழம் ஒன்றே தீர்வு என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.