மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்ற மாணவி..! ஊர் திரும்பும் வழியிலேயே உயிரிழந்த பரிதாபம்..!

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்று ஊர் திரும்பும் வழியிலேயே உயிரிழந்த மாணவி அபிநந்தனா.

Death

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்று ஊர் திரும்பும் வழியிலேயே உயிரிழந்த மாணவி அபிநந்தனா.

விருதுநகரில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் சென்னை மாணவி அபிநந்தனா(15) கலந்து கொள்வதற்காக சென்று உள்ளார். போட்டியில் பங்கேற்ற அவர் ரயில் மூலம் நேற்று காலை சென்னை புறப்பட்டார்.

விருதுநகரில் இருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து ரயில் நிலையத்துக்கு நடந்து சென்ற அவருக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்ட நிலையில் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.