நடிகை மீரா மிதுனின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

Extension of court custody of actress Meera Mithun, who was arrested in a case of slandering people on the list.

பட்டியலின பிரிவு மக்கள் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கைதான நடிகை மீரா மிதுனின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு.

பட்டியலின பிரிவு மக்கள் பற்றி அவதூறாக பேசிய புகாரில் வன்கொடுமை தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக்கு செப். 9-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது. பட்டியலினத்தவரை அவதூறாக பேசிய வழக்கில் நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.