2021-ல் அதிமுக ஆட்சி மலரும் ! இதையே ரஜினி அதிசயம் நிகழும் எனக் கூறுகிறார்- முதலமைச்சர் விளக்கம்

Published by
Venu

2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியே மலரும் என்பதையே ரஜினி அதிசயம் நிகழும் எனச் சொல்லியுள்ளார் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கமல் 60 விழா கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,தமிழகத்தின் முதலமைச்சராக பழனிசாமி ஆகுவர் என்று கனவில் கூட நினைத்திருக்கமாட்டார் என்று தெரிவித்தார்.மேலும் அதிசயம் இன்று நடக்கும் ,நாளை நடக்கும் என்று தெரிவித்தார்.இவர் கூறிய இந்த அதிசயம் என்ற கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது  அவர் பேசுகையில் ,2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியே மலரும் என்பதையே ரஜினி அதிசயம் நிகழும் எனச் சொல்லியுள்ளார்.
எந்த அடிப்படையில் 2021ஆம் ஆண்டில் அதிசயம் நிகழும் என ரஜினி கூறுகிறார் என்று தெரியவில்லை. ரஜினி கட்சி தொடங்கிய பிறகே அவரை பற்றியும், அவரது கருத்தை பற்றியும் விரிவாக கூற முடியும் என்று தெரிவித்துள்ளார் .
 

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

5 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

5 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

5 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

7 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

8 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

8 hours ago